நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக்குழுவிடம் இருந்து இரண்டு நிபந்தனைகள்!

Date:

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியீட்டியதையடுத்து, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பாரா அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைப்பதா என்பது தொடர்பில் தெளிவான உறுதிமொழியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சுயேட்சைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதற்கமைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்திற்கு அடுத்த வாரத்திற்குள் பதிலளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...