நெருக்கடிக்கு அமைதியான தீர்வைக் காண வேண்டும்:சட்டத்தரணிகள் சங்கம்!

Date:

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு வன்முறை மூலம் தீர்வு காணப்படாமல் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இந்த முக்கியமான தருணத்தில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக தமது சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்துள்ள பிரேரணை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு மக்கள் இந்த தருணத்தில் அமைதியான முறையில் செயற்பட வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...