பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க சபாநாயகர் பொலிஸாருக்கு உத்தரவு!

Date:

கட்சித் தலைவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வீடுகளுகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசேட பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வழியில் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கட்சித் தலைவர்கள் தமக்கு அறிவித்ததாக அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...