பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: மஹிந்தவுக்கு வாக்கு சீட்டை காண்பித்த சஜித் பிரேமதாஸ!

Date:

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு குறிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாக்குச் சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்களிப்பதும் வாக்குச்சீட்டை காண்பிப்பதும் தவறு என ஆளும் கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சார்பில் முதலில் வாக்களித்தார்.

இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் யாருக்கு வாக்களித்தோம் என வாக்கு சீட்டை மஹிந்தவுக்கு சஜித் பிரேமதாஷ காண்பித்துள்ளார்.

எனினும் அந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பகீர் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு பகிரங்கப்படுத்திய நிலையில், சஜித் பிரேமதாஸ அதனை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...