புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

Date:

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களுக்கான ஆசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இதற்கமைய, இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...