‘மக்கள் போராட்டத்தை நசுக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’: ஜே.வி.பி

Date:

மக்கள் போராட்டங்களை நசுக்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் அவசரகாலச் சட்டத்தை கண்டித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்களின் குரலை நசுக்கி, பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க முயற்சிப்பதை விட, மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல், மக்களின் எதிர்ப்பை திசை திருப்பும் மற்றொரு சூழ்ச்சி.

‘ஒட்டுமொத்த நாடும் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்கிறது. எனவே, முதலில், பிரதமரை இராஜினாமா செய்யச் சொல்வதற்கு பதிலாக, ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்.

பின்னர், முழு அமைச்சரவையுடன் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும், என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...