‘மக்கள் போராட்டத்தை நசுக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’: ஜே.வி.பி

Date:

மக்கள் போராட்டங்களை நசுக்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் அவசரகாலச் சட்டத்தை கண்டித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்களின் குரலை நசுக்கி, பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க முயற்சிப்பதை விட, மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல், மக்களின் எதிர்ப்பை திசை திருப்பும் மற்றொரு சூழ்ச்சி.

‘ஒட்டுமொத்த நாடும் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்கிறது. எனவே, முதலில், பிரதமரை இராஜினாமா செய்யச் சொல்வதற்கு பதிலாக, ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்.

பின்னர், முழு அமைச்சரவையுடன் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும், என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...