21ஆவது அரசியலமைப்பு திருத்தம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு..!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று 21 ஆவது திருத்தம் தொடர்பில் சட்ட வரைவு ஆலோசகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் கலந்துரையாடி அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்தும் 21ஆவது திருத்தச் சட்டத்தின் சரத்துக்களை இரு எம்.பி.க்களும் மேற்கொள்வார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இது 19வது திருத்தத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும், ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது இதில் அடங்காது. எனினும் இது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும். இது சுதந்திரமான நிறுவனங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில், புதிய திருத்தத்தை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்து, வரும் நாட்களில் இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பதவி விலக வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதை அறிந்துள்ளதாகவும் புதிய அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தனது சம்மதத்தை தெரிவித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பிரதமர் விக்ரமசிங்க கலந்துரையாடி அமைச்சரவையை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இணைவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.

அமைச்சரவை 20 அமைச்சர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள அதேவேளை, பொருளாதார சவால்கள் காரணமாக நிதி அமைச்சை ரணில் வைத்திருக்க வேண்டுமென சில சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...