‘அரசியலமைப்பு திருத்தம் தற்போது பிரச்சினைக்கு தீர்வாகாது’:வஜிர அபேவர்தன

Date:

நாட்டு மக்கள் இப்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மீளப் பெற்று இயல்பு வாழ்க்கையைத் தொடரவே விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து துரிதமாக தீர்க்க வேண்டும் எனவும், இல்லையேல் நாடு பேரழிவிற்குள்ளாகும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

நாட்டுக்கு அவசர பொருளாதார தீர்வொன்று தேவைப்படுவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கனவே அந்த தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...