இலங்கை மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்!

Date:

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று யாழப்பாணத்தில் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக புவனலோஜினி விளங்கி வந்தார்.

புவனலோஜி பிரபல அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் மனைவியாவார் இவர் கடந்த ஆண்டு ஜனவரியில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட் அவரை இழந்து துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சகோதரி புவனலோஜினியின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனைகள் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் ‘கொழும்பு வானொலி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது.

அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...