இலங்கை மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்!

Date:

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று யாழப்பாணத்தில் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக புவனலோஜினி விளங்கி வந்தார்.

புவனலோஜி பிரபல அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் மனைவியாவார் இவர் கடந்த ஆண்டு ஜனவரியில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட் அவரை இழந்து துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சகோதரி புவனலோஜினியின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனைகள் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் ‘கொழும்பு வானொலி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது.

அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...