உண்டியல் முறையில் டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது!

Date:

உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்றதாக அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்று முறைமைகளை தவிர்த்து சட்டவிரோதமான முறைகளில் வெளிநாட்டு பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் டொலர்களை உண்டியல் முறையின் கீழ் மாற்ற முயன்ற போது கிடைக்கப்பட்ட இரகசிய தகவல் அடிப்படையில் பொலிஸ்hர் இன்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 40 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...