நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செல்லும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் நறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை சீரற்ற வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் ஓமானில் இருந்து இன்று மற்றுமொரு எரிவாயு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு நிறுவனம் அறிவுறுத்துகிறது.