பஸ் கட்டண அதிகரிப்பால் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு!

Date:

பஸ் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று (30) பல ரயில்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்த காமினி செனவிரத்ன, மேலும் பல ரயில்களுக்கு நாளையதினம் இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அதிகரிப்பு மற்றும் தொலைதூரப் பகுதிகளிலுள்ள புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டுகள் தீர்ந்து போவதனால் புகையிரத நிலைய அதிபர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இன்று காலை பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘ரஜரட்ட ரஜின’ புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் நிரம்பியிருந்ததால் மாத்தறை புகையிரத நிலையத்தில் பல பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...