மல்வானை பகுதியில் அமைந்துள்ள பசில் ராஜபக்சவின் வீட்டின் மீது தாக்குதல்!

Date:

காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மல்வானையில் உள்ள வீடு ஒன்று இன்று மக்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்தை வீட்டை முற்றுகையிட்டு கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர்.

கொழும்பு அலரி
மாளிகைக்கு எதிரில் மற்றும் காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு என கூறப்படும் வீட்டின் மீது பிரதேச மக்கள் வீட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதேவேளை பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான இந்த காணியில் மக்கள் வந்து வீடுகளை அமைத்து குடியேற வேண்டும் எனவும் தாக்குதல் நடத்திய பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...