மே தின பேரணியில் ஹரீன் – சரத் பொன்சேகா கடும் வாக்குவாதம்:’மரியாதை இரண்டு வழிகளிலும் இருக்க வேண்டும்’

Date:

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம், ‘திட்டமிடல் தொடர்பான ஒரு வாக்குவாதம், இது ஒரு தவறான புரிதல் என்பதால் இருவரும் பிரச்சினையை தீர்த்துக்கொண்டனர்,’ என்று ஒரு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்றிரவு இந்த சம்பவம் தொடர்பாக தனது தனிப்பட்ட முகநூலில் பின்வரும் செய்தியை வெளியிட்டிருந்தார்.

‘நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், கடின உழைப்புக்குப் பிறகு வேறு யாரும் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், மரியாதை இரண்டு வழிகளிலும் இருக்க வேண்டும் எனவும் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் குறித்த காணொளியில் ஹரீன் பெர்னாண்டோ, சரத் பொன்சேகாவை கடுமையாக திட்டி தாக்க முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் சரத் பொன்சேகா உரையாற்றுவதற்கு உரையொன்றை ஏற்பாடு செய்து வந்தமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினால் இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறுக்கிட்டு மோதலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...