ஹர்த்தாலுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பின!

Date:

ஹர்த்தால் நிறைவடைந்ததன் பின்னர் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றும் 4000 இற்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் அமுல்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளுக்காக ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த போதிலும், நேற்று ரயில்கள் இயக்கப்படவில்லை.

அதன்படி இன்றைய தினம் குறித்த புகையிரத சேவை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக தனியார் பேருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மாகாணங்களுக்கிடையிலான நீண்ட தூர பஸ் சேவைகள் இன்று சரியான முறையில் இடம்பெறுவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...