ஹர்த்தாலுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பின!

Date:

ஹர்த்தால் நிறைவடைந்ததன் பின்னர் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றும் 4000 இற்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் அமுல்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளுக்காக ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த போதிலும், நேற்று ரயில்கள் இயக்கப்படவில்லை.

அதன்படி இன்றைய தினம் குறித்த புகையிரத சேவை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக தனியார் பேருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மாகாணங்களுக்கிடையிலான நீண்ட தூர பஸ் சேவைகள் இன்று சரியான முறையில் இடம்பெறுவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...