ஹர்த்தாலுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பின!

Date:

ஹர்த்தால் நிறைவடைந்ததன் பின்னர் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றும் 4000 இற்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் அமுல்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளுக்காக ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த போதிலும், நேற்று ரயில்கள் இயக்கப்படவில்லை.

அதன்படி இன்றைய தினம் குறித்த புகையிரத சேவை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக தனியார் பேருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மாகாணங்களுக்கிடையிலான நீண்ட தூர பஸ் சேவைகள் இன்று சரியான முறையில் இடம்பெறுவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...