ஹர்த்தாலுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பின!

Date:

ஹர்த்தால் நிறைவடைந்ததன் பின்னர் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றும் 4000 இற்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் அமுல்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளுக்காக ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த போதிலும், நேற்று ரயில்கள் இயக்கப்படவில்லை.

அதன்படி இன்றைய தினம் குறித்த புகையிரத சேவை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக தனியார் பேருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மாகாணங்களுக்கிடையிலான நீண்ட தூர பஸ் சேவைகள் இன்று சரியான முறையில் இடம்பெறுவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...