அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக் கூட்டம் இன்று (18) சனிக்கிழமை கண்டி, கட்டுகலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இதன்போதே, அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

இந்த பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை பதவியில் மாற்றமொன்று நிகழும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதேவேளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொருளாராக கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்வர் அஸ்ஹரியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...