சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் வீடியோக்கள்: 3 எரிபொருள் தாங்கிகள் உரிமம் ரத்து!

Date:

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் காணொளி காட்சிகள் பரப்பப்பட்டதையடுத்து, மூன்று எரிபொருள் பாரவூர்திகளின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவை விசாரணைகளை நடத்தி வருகின்றன எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காட்சிகளில் எரிபொருள் போக்குவரத்து லொறிகள் சட்டவிரோதமாக எரிபொருளை இறக்குவதைக் காட்டியது.

இதேவேளை சட்டவிரோத செயற்பாடுகளை கவனத்திற்கு கொண்டு வந்த அனைவருக்கும் அமைச்சர் விஜேசேகர நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்கும் மனிதாபிமான உதவிக்கு அமைச்சரவை அனுமதி!

வடக்கு நேபாளத்தின் ரகுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கடுமையான...

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மஹிந்த தேசப்பிரியவுடன் விசேட புத்திஜீவித்துவ கலந்துரையாடல்!

'நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை' தற்போதைய போக்குகள் என்ற...

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தகவல்

-லத்தீப் பாரூக் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள்...

அடுத்த கட்டத்தை எட்டியது ‘மக்கா ஒப்பந்தம்’: சவூதியில் அமைகிறது நிரந்தர செயலகம்!

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியே ஆகிய மூன்று நாடுகளும் தங்கள்...