அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல்!

Date:

பத்தரமுல்ல பெலவத்தையில் கல்வி அமைச்சுக்கு எதிரே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது மாணவர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இவ்வேளையில் அங்கிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்கள் நோக்கி கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...