அனைவரும் ஆதரவளித்தால் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்லலாம்: வஜிர

Date:

நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது 20 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அந்த நோயாளர்களை கவனிக்க வந்தவர்தான் நிபுணத்துவ மருத்துவர் பிரதமர்.

ரணில் விக்கிரமசிங்கவை சபிக்காமல் அனைவரின் ஆசியும் கிடைத்தால்! இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைப் பிரகடனம் இன்றும் பூரண உண்மையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கும் கொள்கைப் பிரகடனத்தை மக்கள் செவிமடுத்திருந்தால் இன்று நாடு இவ்வாறான அவலத்தை எதிர்நோக்கியிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...