இந்தியாவினால் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு!

Date:

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 14,700 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் பவுடர் மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கிய 3 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்களை  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று இலங்கைக்கு கையளித்தார்.

தமிழ்நாடு அரசின் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் மருந்துகள் என்ற பெரிய உறுதிப்பாட்டின் கீழ் இது இரண்டாவது பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றதாக என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதாரம் தொடர்பான பல நிறுவனங்களுக்கு மருந்துகள் வழங்குதல், இலங்கை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம், தேவைப்படும் பிரிவினருக்கு உலர் உணவுகள் வழங்குதல் போன்ற வடிவங்களில் இந்திய அரசு இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த நிவாரணப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இந்த நிவாரண உதவி பொருட்களின் பொறுமதி மூன்று பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...