இன்று முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட அதிவேக ரயில் சேவை!

Date:

ஜூன் 15ஆம் திகதி முதல் விசேட பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் பின்னர், இன்று கல்கிசையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான நகரங்களுக்கு இடையிலான சொகுசு விரைவு ரயில் சேவையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை அடுத்து அண்மைக்காலமாக போக்குவரத்து செலவுகள் மற்றும் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இன்று முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

கல்கிசையில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

இதே ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை (20) அதிகாலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ரயில்வே துறையின் தகவலின்படி, இந்த ரயிலில் 10 முதல் வகுப்பு பெட்டிகள் உட்பட குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் 520 இருக்கைகள் உள்ளன.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...