இன்று முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட அதிவேக ரயில் சேவை!

Date:

ஜூன் 15ஆம் திகதி முதல் விசேட பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் பின்னர், இன்று கல்கிசையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான நகரங்களுக்கு இடையிலான சொகுசு விரைவு ரயில் சேவையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை அடுத்து அண்மைக்காலமாக போக்குவரத்து செலவுகள் மற்றும் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இன்று முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

கல்கிசையில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

இதே ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை (20) அதிகாலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ரயில்வே துறையின் தகவலின்படி, இந்த ரயிலில் 10 முதல் வகுப்பு பெட்டிகள் உட்பட குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் 520 இருக்கைகள் உள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...