இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக ஏற்பாட்டில் மாகாண மட்ட ரக்பி போட்டி!

Date:

பாகிஸ்தானுக்கும் இலங்கை ரக்பிக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது

இதன்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தூதுவர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இலங்கை ரக்பி வரலாற்றில் முதல் தடவையாக மாகாண ரக்பிக்கு அனுசரணை வழங்கினார்.

இலங்கை ரக்பி சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய பாகிஸ்தான் தூதரக அனுசரணையில் மாகாண மட்டத்தில் உள்ள சகல ரக்பி விளையாட்டு சங்கங்கள் வீரர்களையும் இத்துறையில் ஈர்ப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் மாகாண மட்டத்தில் ரக்பி விளையாட்டுப் போட்டியினை நடாத்துவதற்கும் என    திங்கட்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் ஒப்பந்தம் ஒன்று பாகிஸ்தான் தூதுவர் மற்றும் இலங்கை ரக்பி சங்க தலைவருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.

இந் நிகழ்வில் பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்க்கி , இலங்கை ரக்பி சங்க தலைவர் றிஸ்லி இல்யாஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் அனுசரணையாளர் வெளியீடும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதி தூதுவர் தன்வீர் அஹமட், பாகிஸ்தான் தூதரக முதலாவது செயலாளர் திருமதி ஆயிசா அபுபக்கர், ரக்பி சங்கத்தின் பணிப்பாளர் ஹம்சா ஹிதாயத்துல்லா மற்றும் பிரதி தலைவர் றியர் அட்மிரல் உதய ஹெட்டியாராச்சியும் கலந்து கொண்டர்.

இது பாகிஸ்தான்-இலங்கை இளைஞர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கான மற்றொரு படியாகும்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...