இலங்கைக்கு பெட்ரோல் கப்பல் வருவதில் தாமதம்!: எரிசக்தி அமைச்சர்

Date:

இலங்கைக்கு இன்றைய தினம் அதிகாலை வரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகவே வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெற்றோல் விநியோகிக்கப்படும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் டீசலின் வரையறுக்கப்பட்ட முறையில் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று ஜூன் 23 அதிகாலையில் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் வந்து சேரும் என   அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அதன் வருகை இப்போது தாமதமாகியுள்ளது.  எனவே ஜூன் 24 வெள்ளிக்கிழமை கொழும்பில் பெட்ரோல் கப்பல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டாலும், எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளை காணமுடிந்தது.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...