கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றமான சூழல்: கைதி ஒருவர் பலி: நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம்!

Date:

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் உள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையம் என்பது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிறுவனமாகும், இது நீதி அமைச்சின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தால் நடத்தப்படுகிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...