குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று!

Date:

அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று  நடைபெறவுள்ளது.

695 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கூடுதல் மதிப்பீடு நேற்று பொது நிதி தொடர்பான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் தலைமையில் இந்த நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது.

துணை மதிப்பீட்டில் உள்ள 695 பில்லியன் ரூபாயில் 395 பில்லியன் மீள் செலவினமாகவும் 300 பில்லியன் மூலதனச் செலவினமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை மேற்கொண்டு வழங்குவதற்காக 87,000 மில்லியன் ரூபாயும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும். 5,000 ரூபாய் கொடுப்பனவுக்காக 40,000 மில்லியன் ரூபாயும் மேலதிக கொடுப்பனவுக்காக 15,000 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

695 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய செலவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து செலவுகளையும் குறைப்பதன் மூலம் 300 பில்லியனுக்கும் அதிகமான தொகையை இது சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...