‘எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்’: எரிசக்தி அமைச்சர்

Date:

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு போதிய வெளிநாட்டு கையிருப்பு நாட்டில் இல்லாத காரணத்தினால், குறிப்பிட்ட முன்னுரிமையின் கீழ் வெளியிட  எரிபொருளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளதுடன், அரச பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படும்.

மேலும், மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள 22 மீன்பிடி துறைமுகங்கள் மூலம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் 160 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...