‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம்’: கொழும்பில் சஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

Date:

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு உடனடி தீர்வு கோரி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் உடடினயாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம’ என்ற தொனிப்பொருளிலே இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...