‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம்’: கொழும்பில் சஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

Date:

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு உடனடி தீர்வு கோரி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் உடடினயாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம’ என்ற தொனிப்பொருளிலே இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...