ஜனாதிபதி அலுவலகம் அருகே பதற்றமான நிலை: போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!

Date:

இன்று காலை கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிசார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கொட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்ததன் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, லோட்டஸ் சாலையை வாகன போக்குவரத்துக்கு திறந்துவிட்டனர்.

இதேவேளை, நிதி அமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கலைந்து சென்றுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...