தரிசு நிலங்களை இனங்கண்டு இளைஞர்களிடம் விவசாயத்துக்காக ஒப்படைக்க வேண்டும்: மகிந்த அமரவீர

Date:

ஐந்து வருடங்களாக நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்டுள்ள அனைத்து வயல் நிலங்களையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு சுவீகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதேநேரம், தற்போது விவசாயம் செய்யப்படாத நெற்காணிகள் கமநல சேவைகள் திணைக்களத்தினால் இனங்கண்டு காணியற்ற மக்களுக்கு 5 வருடங்களுக்கு பயிர்ச்செய்கைக்காக கையளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வெற்று நிலங்களில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்தவர்களுக்குச் சொந்தமானவை எனவும், ஏனையவை ஆட்கள் பற்றாக்குறையினால் பயிரிடப்படுவதில்லை எனவும், நாடளாவிய ரீதியில் 100,000 ஹெக்டேயருக்கும் அதிகமான தரிசு நிலங்கள் இருப்பது மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...