தற்கொலை முயற்சியில் குழந்தையை களனி ஆற்றில் வீசிய தாய்!

Date:

தனது குழந்தையை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது 05 வயது மகனை வத்தளை கதிரான பாலத்தில் இருந்து களனி ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றபோது அப்பகுதி மக்களால் தடுத்து வைக்கப்பட்டு பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை காணாமல் போன குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. களனி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் காணாமல் போன ஐந்து வயது குழந்தையை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

42 வயதான தாய் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று வியாழன் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...