லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதித பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், முதலில் தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்த முதித பீரிஸ், விநியோகஸ்தர் 6000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு மட்டுமே விலையை குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஓமானில் உள்ள விநியோகஸ்தர் தாய்லாந்தின் விநியோகஸ்தரை விட சற்றே அதிக விலையை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால் குறைந்தபட்சம் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஆர்டருக்கு, அவர்கள் 03 முதல் 04 மாதங்களுக்கு எரிவாயுவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு ஓமானில் உள்ள விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...