முன்னாள் அமைச்சரின் மகனான ரவிந்து வெதஆராச்சி மற்றும் அவரது மனைவி, வலஸ்முல்ல நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் பெந்திகம இடைப்பாதையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரால் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கமைய பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாகனத்தில் கவனக்குறைவாக குளிர்சாதனப்பெட்டி ஏற்றப்பட்டதால், அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்பாக, இடைமாற்றில் கடமையாற்றிய காவலர் வாகனத்தை நிறுத்தினார்.
ஏற்றப்பட்ட குளிர்சாதன பெட்டியுடன் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதால், அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனும் அவரது மனைவியும் பொலிஸ் அதிகாரிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக முறைப்பாடில் பதிவுசெய்யப்பட்டதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.