தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி!

Date:

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 2 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து, இலங்கையை துடுப்பாட அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் சரித் அசலங்க 39 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஜியே ரிச்சர்ட்சன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பெற்றனர்.

125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.

துடுப்பாட்டத்தில் ஆரோன் பின்ச் 24 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...