‘நெருக்கடியான காலத்திலும் அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிக்கின்றது’: திஸ்ஸ

Date:

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசாங்கம் விற்பனை செய்வதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மக்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் முதன்மைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், நெருக்கடியான சூழலில் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘இன்று, நாடு முழுவதும் பெட்ரோலிய விநியோகம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.டோக்கன் முறை பயன்படுத்தப்படுவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகிறார்.

மேலும் வாரந்தோறும் எண்ணையை எண் வரிசைப்படி பெற்றுக்கொள்ளும் முறை அமைக்கப்படும் என்றார். உண்மையில் இந்த நாட்டில் ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லை.

இப்போது பெட்ரோலியத்துறை அமைச்சர் அருமையான தீர்வு சொல்கிறார். இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்காக விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில், நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, இலங்கையின் உள்ளுர் வளங்களை மீண்டும் ஒருமுறை விற்று பிரச்சினையை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது.

மேலும், இது ஒரு சோகமான நிலை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தற்போது கடைப்பிடித்து வரும் உத்தியை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் வழங்குவது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும்.

அதைச் செய்யத் தவறிய அரசாங்கம் நெருக்கடியான காலத்தில் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிக்க முயல்கிறது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...