பேருவளையில் வீட்டுத் தோட்ட வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வும்!

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பேருவளை மன்றமும், ரம்யா லங்கா நிறுவனமும் இணைந்து ‘உதலு சவிய’ திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்ட உருவாக்கத்திற்கான வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் அங்குராப்பண நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு பேருவளை, அம்பேபிடிய, அஸாபிர் ஜன்னாஹ் அல்குர்ஆன் பாடசாலையில் நடைபெற்றது.

இதில் பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து பாடசாலைகள், பேருவளை அஸாபிர் ஜன்னாஹ் அல்குர்ஆன் பாடசாலை மற்றும் இக்ராஃ தொழில்நுட்பக் கல்லூரியிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள இந்நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுபதிகாரிகள், பேருவளை குருந்துவத்தை விகாரை பிரதானிகள் ஊர்பிரமுகர்கள் மற்றும் பேருவளை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆண், பெண் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...