பாடசாலை சிறுவர்களின் உணவுத் தேவைக்காக சீனாவிலிருந்து அரிசி அன்பளிப்பு!

Date:

இலங்கையின் கல்வி அமைச்சுக்கு 1,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைச் சிறார்களுக்கு விநியோகிப்பதற்காக 44 கொள்கலன்களில் குறித்த அரிசித் தொகை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

7,900 பாடசாலைகளில் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆறு மாத வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு புத்தாண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...