பாடசாலை சிறுவர்களின் உணவுத் தேவைக்காக சீனாவிலிருந்து அரிசி அன்பளிப்பு!

Date:

இலங்கையின் கல்வி அமைச்சுக்கு 1,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைச் சிறார்களுக்கு விநியோகிப்பதற்காக 44 கொள்கலன்களில் குறித்த அரிசித் தொகை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

7,900 பாடசாலைகளில் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆறு மாத வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு புத்தாண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...