பாணந்துறையில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

Date:

பாணந்துறை பிரதேசத்தில் இன்று (3) நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மத்தத்த தெரிவித்துள்ளார்.

சுடப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவர் பாணந்துறை பின்வத்தையில் வசிக்கும் 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இதேவேளை, அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகல்ல மருதானை வீதி பகுதியில் இன்று (ஜூன் 3) காலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லொறியில் வீடுகளுக்குச் சென்று ஆரஞ்சு பழங்களை சேகரித்து விற்பனை செய்து வந்தவர் எனவும், லொறியில் பயணித்த போதே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...