பிரதமர் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: வஜிர

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று இலங்கையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அப்பணி வெற்றி பெறும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் பிரதமர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும், பதற்றமின்றி நிதானமாக செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...