மகிந்த ராஜபக்ஷ கறுப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றம் வந்தார்!

Date:

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தனது கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.

அதேநேரம், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்புப் பட்டியை அணிந்தவாரே இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அனுதாப பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இதன்படி அவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர்.

இதன்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தக்காலத்தில் 30 வருடங்களாக மக்கள் மரண பயத்துடனேயே வீதிகளில் சென்றனர்.

2019 மே 19 ஆம் திகதிக்கு பின்னர் அந்த அச்சம் இல்லாது செய்யப்பட்ட போதும், தற்போது எம்.பிக்கள் மரண அச்சத்துடன் செல்லும் நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னால் திட்டமிட்டு செயற்படும் சிலர் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...