மாத்தளையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், உலர் உணவுகள், தையல் இயந்திரங்கள் மற்றும் பிக்குகளுக்கு வசிக்கும் வீடொன்றையும் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மாத்தளை கொங்கலஹமுல்ல கிபலராம விகாரையில் நேற்று (09) இடம்பெற்றது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி, மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்சல் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டு இதனை வழங்கி வைத்தனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப நிலையம் அமைப்பதற்கான கணனிகள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான தையல் இயந்திரம்,வழங்கப்பட்டது

கௌடுபெல்ல மகா வித்தியாலய மாணவர்களுக்கான கணனி, உதைபந்தாட்ட, கிரிக்கெட் உபகரணங்கள் என்பன பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...