மே 9 வன்முறைச் சம்பவத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்: தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள ‘மைனா கோ கம’ ஆகிய இரண்டு அமைதியான போராட்டத் தளங்களில் ‘அரச அனுசரணையுடன் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு இன்றுடன் (ஜுன் 9) ஒரு மாதத்தைக் குறிக்கிறது.

அதற்கமைய இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ, தேஷபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இரவு 8 மணிக்குள் கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டார், மேலும் அவர்; தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...