மே 9 வன்முறைச் சம்பவத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்: தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள ‘மைனா கோ கம’ ஆகிய இரண்டு அமைதியான போராட்டத் தளங்களில் ‘அரச அனுசரணையுடன் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு இன்றுடன் (ஜுன் 9) ஒரு மாதத்தைக் குறிக்கிறது.

அதற்கமைய இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ, தேஷபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இரவு 8 மணிக்குள் கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டார், மேலும் அவர்; தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...