மே 9 வன்முறைச் சம்பவம்: மஹிந்த கஹந்தகம கைது!

Date:

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக இவரும் ஏனைய குழுவினரும் பெயரிடப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

சந்தேகநபர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஆகியோர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மஹிந்த கஹந்தகம ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநாகர சபை உறுப்பினரான சுயதொழிலாளர் சங்க சம்மேளனத்தின் தலைவராக செயற்படுபவராவார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...