பொதுமக்களுக்கு ஒரே தீர்வாக இருந்த ரயில் பயணம்: ரயில் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

Date:

ரயில் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணங்களையும், 14 ஆண்டுகளாக திருத்தப்படாமல் இருந்த சரக்கு, தபால் மற்றும் இதர கட்டணங்களையும் திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க கொள்கைக்கு அமைவாக இலங்கை புகையிரத திணைக்களம் சலுகைக் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையினால் திணைக்களத்திற்கு ஏற்படுகின்ற நட்டங்களைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முன்வைத்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...