லங்கா- ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசியமற்ற சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்கும் என அதன் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், குறித்த எரிபொருள் நிலையங்கள், டோக்கன் முறைமையின் மூலம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றதும், எரிபொருளைப் பெற விரும்பும் வாடிக்கையாளரை இராணுவம் தொலைபேசியில் அழைப்பார்கள்.
எனவே வாடிக்கையாளர் முதலில் டோக்கனைப் பெற வேண்டும். டோக்கன் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையில், ‘அத்தியாவசியம்’ என்று அழைக்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.