வாரத்திற்கு ஒரு நாள் தபால் அலுவலகங்களை மூட தீர்மானம்!

Date:

தபால் கட்டணத்தை உடனடியாக திருத்தம் செய்யுமாறு தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய செலவுகள் அதிகரிக்காமல் தபால் நிலையத்தை நடத்துவது கடினம் என தபால் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

காகித தட்டுப்பாடு காரணமாக, வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு தபால் துறையிலிருந்து வரும் கடிதங்களின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

நஷ்டத்தை குறைக்க, வாரத்தில் ஒரு நாள், தபால் துறையை மூட வேண்டும் என, தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட தபால் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் தபால் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

பொது திறைசேரியில் இருந்து பணம் பெற்றாலும் தபால் சேவை நஷ்டத்தில் தான் இயங்கி வருவதுடன் நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்ட தபால் துறை தயாராகி வருகிறது.

எனினும் சுமார் ஒன்றரை வருடங்களாக தபால் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...