அனைவரும் ஆதரவளித்தால் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்லலாம்: வஜிர

Date:

நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது 20 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அந்த நோயாளர்களை கவனிக்க வந்தவர்தான் நிபுணத்துவ மருத்துவர் பிரதமர்.

ரணில் விக்கிரமசிங்கவை சபிக்காமல் அனைவரின் ஆசியும் கிடைத்தால்! இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைப் பிரகடனம் இன்றும் பூரண உண்மையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கும் கொள்கைப் பிரகடனத்தை மக்கள் செவிமடுத்திருந்தால் இன்று நாடு இவ்வாறான அவலத்தை எதிர்நோக்கியிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...