அமைச்சரவைப் பொறுப்புகளை ஏற்கும் எம்.பி.க்கள் ஸ்ரீ.ல.சு.க.-வில் இருந்து நீக்கப்படுவார்கள்- மைத்திரி

Date:

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படும் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தின்படி, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கப் பதவியை ஏற்றுக்கொண்டால், அவர் சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார் என மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...