இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி, இணையக் கட்டணங்கள் உயர்வு!

Date:

இன்று (ஜூன் 3) நள்ளிரவு முதல் வட், மற்றும் தொலைத்தொடர்பு வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பிரதிப் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதற்கு ஏற்றாற் போல் தொலைபேசி கட்டணங்களும் உயர்வடையவுள்ளன.

அதன்படி தொலைத்தொடர்பு வரி 11.25வீதத்தில் 15வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பு கூட்டு வரி (வட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொலைபேசி கட்டணமும் உயரும் என்றார்.

அதன்படி, மொத்த வரி விகிதத்தில் 22.6 வீதமாக இருந்த வரி விகிதம் 31.43வீதமாக உயரும் என்றார்.

இணைய சேவைக் கட்டணங்கள் மீதான பெறுமதி சேர் வரி அதிகரிப்பும் திருத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 10.2வீதமாக முதல் 14.29வீதம் வரை வரி உயரும் என்றார்.

நாட்டிலுள்ள முன்னணி தொலைபேசி சேவை வழங்குனர்கள் உரிய வரித் திருத்தங்களுக்கு அமைவாக தமது அழைப்புக் கட்டணங்களையும் இணைய சேவைக் கட்டணங்களையும் அதிகரிப்பதுடன், இது தொடர்பில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...